தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆணைய அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

Advertisment

sahuu

குண்டு வெடிக்கும் என மொட்டை கடிதம் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மதியம்போல தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. இதன்பின் வெடிகுண்டு சோதனை குழு, மோப்ப நாய்கள் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு விரைந்து வந்து வெடிகுண்டு இருக்கிறதா என சோதனையில் இறங்கியுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

வருகிற 23ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், இதுபோன்ற அறிவிப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.