Advertisment

"அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து" - அமைச்சர் செங்கோட்டையன்

tamilnadu education minister press meet at erode

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். பாடத்திட்டங்கள் 9- ஆம் வகுப்பு வரை 50%, 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கு 35% குறைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலந்து ஆலோசித்தபிறகு முடிவு செய்யப்படும்." என்றார்.

Advertisment

கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Erode PRESS MEET minister sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe