Skip to main content

தமிழகத்தில் 7 டி.ஆர்.ஓ.-க்கள் இடமாற்றம்; 6 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு!!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

tamilnadu deputy collectors chief secretary shanmugam


தமிழகம் முழுவதும், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான 7 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், துணை ஆட்சியர் நிலையிலான 6 பேருக்கு, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு வழங்கியும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளார்.

 

சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முதன்மை வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அலுவலர் நிலை- 4 பணியிடத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த பரமேஷ்வரி, தற்போதுவரை வெங்கடேஷ் பணியாற்றி வந்த பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

சென்னையில் உள்ள சுற்றுவட்ட மோதிரச்சாலை அமலாக்கத் திட்டப்பிரிவு சிறப்பு வருவாய் அலுவலர் ராமபிரதீபன், சென்னை பெருநகர மாநகராட்சி வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். 

 

சேலம் ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் விஜய் பாபு, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராக இருந்த ராஜசேகரன், சென்னையில் உள்ள சிப்காட் பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது, புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடமாகும்.
 

tamilnadu deputy collectors chief secretary shanmugam


திருவாரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 67 நில எடுப்புப்பிரிவு, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த மணிமேகலை, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டு உள்ளார். 

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநரான மங்களம், சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன் இங்கு பணியாற்றி வந்த தேன்மொழி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பதவி உயர்வு பெற்றவர்கள் பட்டியல்:

 

தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர்கள் நிலையிலான 6 அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்த்தப்பட்டு, தர்மபுரி மாவட்ட சிப்காட்டில் அமையுள்ள புதிய தொழிற்பூங்கா திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) ஆக பணியமர்த்தப்பட்டு உள்ளார். இதற்குமுன், இப்பணியிடத்தில் இருந்த அழகிரிசாமி ஓய்வு பெற்று விட்டார்.

 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி டி.ஆர்.ஓ. ஆக பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்ட என்.ஹெச்.67 பிரிவுக்கு சிறப்பு அலுவலராக அமர்த்தப்பட்டு உள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மருத்துவர் செல்வசுரபி, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் டி.ஆர்.ஓ. ஆக பதவி உயர்வு பெற்று, சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட முத்திரைத்தாள் பிரிவு சிறப்பு துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்த நர்மதா தேவி, சேலம் ஆவின் பால் பண்ணை பொது மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 

http://onelink.to/nknapp


சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்கக நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த விஜயகுமாரி, பதவி உயர்வு பெற்று, சென்னை சுற்றுவட்ட மோதிரச்சாலைத் திட்ட அமலாக்கப்பிரிவு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ.) ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.