Skip to main content

ஜெயலலிதாவின் கொள்கைப்படி அரசு நல்ல முடிவு எடுக்கும் - துணை முதல்வர் ஓ.பி.எஸ்!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10% இட ஒதுக்கீடு குறித்து பேசுகையில், 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், அந்த கட்சித்தலைவர்கள் ஒவ்வொரு வரும் நல்ல கருத்துக்களை கூறியதாக தெரிவித்தார். ஜெயலலிதா கொள்கையின் படி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

 

TAMILNADU DEPUTY CM SAID 10% QUOTA TAKE GOOD DECISION ANNOUNCED

 

 

 

இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், அதே சமயம் ஜெயலலிதா கொண்டு வந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அரசு நல்ல முடிவை எடுக்கும் என தெரிவித்தார். 10% இட ஒதுக்கீட்டில் அதிமுக ஆதரவா? அல்லது எதிர்ப்பா? என்பது தொடர்பான நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்