tamilnadu deputy cm ops tweet

மூக்கையாத் தேவர் தியாகத்தை போற்றுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "உசிலம்பட்டி மண்ணின் மைந்தர் பி.கே.மூக்கையாத் தேவர் நினைவுநாளில் அவரது தியாகத்தை போற்றுவோம். சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் தமிழக மக்களின் நலனுக்காக, உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பேரறிஞர் அண்ணாவின் பேரன்பிற்கும் நன்மதிப்பிற்கும் உரியவர் மூக்கையாத் தேவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.