Skip to main content

முதன் முதலில்‘நகரின் சாவி’பெற்ற ஓ.பன்னீர்செல்வம்! - முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

சிகாகோவில் நடைபெற்ற இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அங்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது, சிகாகோ Global Strategic Alliance Inc உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக, தமிழகத்தின் துணை முதல்வர் முன்னிலையில், Global Strategic Alliance Inc தலைவர் விஜயபிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப. ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

tamilnadu deputy cm o paneer selvam usa trip investment sign

மேலும், சிகாகோவில் உள்ள மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் சார்பில் தேனியில் ‘மூத்த குடிமகன்களுக்கு ஒரு மையம்’துவங்கப்படும் என்று அதன் நிறுவனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார். சிகாகோ நகரின் கூடைப்பந்து அணியின் சார்பில் தேனியில்‘கூடைப்பந்து அகாடமி’ அமைக்கப்படும் என்று அதன் பயிற்சியாளர் கென்ஸ்மேன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நெப்பர்வல்லி நகரின் மேயர் ஸ்டீவ் சிரிக்கோ‘நகரின் சாவி’ஒன்றை தமிழ்நாடு துணை முதலமைச்சரிடம் நினைவுப்பரிசாக வழங்கினார். 

tamilnadu deputy cm o paneer selvam usa trip investment sign


தமிழ்நாட்டிலிருந்து வந்து இந்த நினைவுப்பரிசை முதன் முதலில் பெற்றவர் என்பதால் நன்றி தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், நெப்பர்வல்லி மேயருக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின் போது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

tamilnadu deputy cm o paneer selvam usa trip investment sign


மேலும், சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்குச் சென்று அங்கு செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை திட்டங்களுக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் துணை முதல்வர் விரிவான ஆலோசனை நடத்தினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.