Skip to main content

முதன் முதலில்‘நகரின் சாவி’பெற்ற ஓ.பன்னீர்செல்வம்! - முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

சிகாகோவில் நடைபெற்ற இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அங்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது, சிகாகோ Global Strategic Alliance Inc உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக, தமிழகத்தின் துணை முதல்வர் முன்னிலையில், Global Strategic Alliance Inc தலைவர் விஜயபிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப. ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

tamilnadu deputy cm o paneer selvam usa trip investment sign

மேலும், சிகாகோவில் உள்ள மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் சார்பில் தேனியில் ‘மூத்த குடிமகன்களுக்கு ஒரு மையம்’துவங்கப்படும் என்று அதன் நிறுவனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார். சிகாகோ நகரின் கூடைப்பந்து அணியின் சார்பில் தேனியில்‘கூடைப்பந்து அகாடமி’ அமைக்கப்படும் என்று அதன் பயிற்சியாளர் கென்ஸ்மேன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நெப்பர்வல்லி நகரின் மேயர் ஸ்டீவ் சிரிக்கோ‘நகரின் சாவி’ஒன்றை தமிழ்நாடு துணை முதலமைச்சரிடம் நினைவுப்பரிசாக வழங்கினார். 

tamilnadu deputy cm o paneer selvam usa trip investment sign


தமிழ்நாட்டிலிருந்து வந்து இந்த நினைவுப்பரிசை முதன் முதலில் பெற்றவர் என்பதால் நன்றி தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், நெப்பர்வல்லி மேயருக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின் போது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

tamilnadu deputy cm o paneer selvam usa trip investment sign


மேலும், சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்குச் சென்று அங்கு செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை திட்டங்களுக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் துணை முதல்வர் விரிவான ஆலோசனை நடத்தினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.