Advertisment
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியமோ அல்லது மாலையோ ஓ.பி.எஸ். வீடு திரும்புவார் என்று தகவல் கூறுகின்றன.
உடல் பரிசோதனைக்காக கடந்த மே மாதம் 25- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே ஓ.பி.எஸ். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.