நீண்ட இழுபறிக்குப் பின்பு உள்ளாட்சித் தேர்தல், வரும் நவம்பர் அல்லது டிசம்பருக்குள்ளாக நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப மாவட்டங்களில் நடக்கிற ஏற்பாடுகள் தகவல்களை உறுதிப்படுத்துகின்றன.

Advertisment

tamilnadu corporation municipality election upcoming nellai evm machine

இன்று காலை 11.30 மணியளவில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளிலிருந்து இறக்கப்பட்ட வாக்களிக்கும் மின்னணு இயந்திரங்கள் தனி குடோனில் வைக்கப்படுகிறது. சுமார் 1800 வாக்கு இயந்திரங்கள் இறக்கப்பட்டது. இது குறித்து நாம் விசாரித்த நேரத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அதன் பொருட்டு வாக்கு இயந்திரங்கள் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. இவைகள் இங்கிருந்து அம்பை, வி.கே.புரம் புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய நகராட்சிப் பகுதிகள் ஒன்றியப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.