Published on 04/04/2020 | Edited on 04/04/2020
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கரோனா உறுதியான நிலையில், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 53 வயது பெண் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும், அவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தேனி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.