Tamilnadu corona virus new updates

Advertisment

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிச்சை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு மார்கெட்மூலம் அதிகம் பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும்சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1409 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.