Advertisment

தஞ்சையில் இருந்து திருச்சி பள்ளிக்கும் பரவிய கரோனா...!

Corona spread from Thanjavur to Trichy school ...!

கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பள்ளிகளில்கரோனாதொற்று என்பது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்உள்ள 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்குகரோனாஉறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில்பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளிஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர்ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், நான்காவதாக நேற்று முன்தினம் (18.03.2021) காலை தஞ்சையில்அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும்கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Advertisment

நேற்று மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதெரியவந்துள்ளது. அதேபோல் தஞ்சை சாஸ்தா பல்கலை மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்குகரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் பள்ளிக்களில்மட்டும் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 142 பேரில் 66 பேர் குணமடைந்து விட்டனர்.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என 76 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி பள்ளிக்கும் பரவியுள்ளதுகரோனோ. திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. ஆசிரியரின் மனைவி டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர்பணிக்காக தஞ்சை சென்று வரும்போது கரோனாதொற்று உறுதியான நிலையில்,கணவரானதிருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியருக்கும் கரோனாஉறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thiruchy Thanjai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe