காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசைக்கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று (15.04.2023) காலை 11 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் மறியல் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகில் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.