Skip to main content

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை...2000- க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைப்பு!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மிதமான மழை பெய்த போதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக முடங்கியுள்ளது. வீடு, உடமைகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தும், வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் குந்தா, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதியிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு கருதி தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

 

TAMILNADU COIMBATORE HEAVY RAIN AND FLOODED NILGIRIS FULLY AFFECTED




 

அங்கு அவர்களுக்கு உணவு, போர்வைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழக்கபட்டு வருகிறது. இருப்பினும் தங்களுக்கு நிரந்தர வீடு மற்றும் வேலை வாய்ப்புக்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே உதகை எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளில் சிக்கியிருந்த 45 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்படையினர் மீட்டனர். அதில் 4 பேருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்கள் கோவை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

 

TAMILNADU COIMBATORE HEAVY RAIN AND FLOODED NILGIRIS FULLY AFFECTED

 

 

கொட்டும் மழையில் உயிரை பொருட்படுத்தாமல் நடு வனப்பகுதியில் ஹெலிகாப்டரை தரை இறக்கி மீட்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது. மேலும்  அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 45செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 450செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பெய்த மழை அளவில், இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.