Skip to main content

சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு தூக்கு..உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

முஸ்கின், ரித்திக் என்ற இந்த 2 பெயர்களை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த பிஞ்சுக் குழந்தைகள் பி.ஏ.பி வாய்க்காலில் சடலமாக மிதந்து கிடந்த காட்சியை கண்டு, அப்போது தமிழகமே கண்ணீர் சிந்தியது. கோவை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் மகள் தான் முஸ்கின் (வயது11), அவளது தம்பி ரித்திக்(வயது8) ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2010-ஆம் ஆண்டு அக்.29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அவர்களை வேனில் கடத்திச் சென்ற மோகனகிருஷ்ணனும், அவனது கூட்டாளியான மனோகரனும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தனர். சிறுவன் ரித்திக்கின் வாயில் சாணிப்பொடி கலந்த தண்ணீரை ஊற்றி கொலை செய்துள்ளனர். 

 

tamilnadu coimbatore child issue delhi supreme court judgment

 


பின்னர் சிறுமி முஸ்கானையும் கொலை செய்த அவர்கள், 2 பேரின் சடலத்தையும் பி.ஏ.பி வாய்க்காலில் வீசிவிட்டு தப்பினார். இதற்கிடையே, 2 சிறுவர்களையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணையை துவக்கினர். அதற்குள், வாய்க்காலில் 2 பேரின் சடலங்கள் கிடப்பது தெரியவந்தது. தமிழக மக்களை அதிரவைத்த இக்கொலை வழக்கில் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன் (எ) மோகனகிருஷ்ணன், அவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறுமி பிரேத பரிசோதனை  அறிக்கையில், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அப்போதைய கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சைலேந்திரபாபு, இந்த வழக்கில் தனிக் கவனம் எடுத்து விசாரணை நடத்தினார்.

 

 

tamilnadu coimbatore child issue delhi supreme court judgment

 

முக்கிய குற்றவாளியான மோகன கிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் 'என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். ஒரு வாரத்திலேயே குற்றவாளிக்கு முடிவுரை எழுதிய காவல்துறைக்கு அப்போது பாராட்டுக்கள் குவிந்தன. மற்றொரு குற்றவாளியான மனோகரன் மீதான வழக்கில் 45 நாளில் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு முடிந்து ஓராண்டிலேயே அதாவது 2012-நவ.07-ந்தேதி மனோகரனுக்கு ஒரு தூக்கும், 3 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், மனோகரனின் தூக்கை இன்று உறுதி செய்திருக்கிறது. குழந்தைகள் மீது வக்கிரம் கொள்பவர்களுக்கும் அவர்களை போகப் பொருளாக பார்ப்பவர்களுக்கும் மனோகரனின் மரணம் எச்சரிக்கையாக இருக்கட்டும். முஸ்கான், ரித்திக் ஆகியோர் ஆன்மா சாந்தியடையட்டும்.!




 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.