காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று (11/09/2020) ஆய்வு செய்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள கரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 260.46 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூபாய் 362 கோடியில் 15,910 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.