tamilnadu cm palanisamy tweet chennai day

வந்தோரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்துக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கரோனா பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை"! என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment