நெல்லை தென்காசியில் நடைபெற்று வரும் இசக்கி சுப்பையா அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.
அதே போல் திமுக கட்சி மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டினார். அதிமுக தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதி படி ஏழை மக்களுக்கு ரூபாய் 2000 உதவித்தொகை இன்னும் இரண்டு மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்தார். அதே போல் தென்காசி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என கூறினார்.