Skip to main content

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14- ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14- ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில் "தமிழகத்தில் மார்ச் 31- ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மளிகை கடைகள் வீடுகளுக்கேச் சென்று பொருட்களை வழங்கலாம். உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மளிகை கடைகள் இயங்க நேர வரம்பு ஏதும் குறைக்கப்படவில்லை. 

TAMILNADU CM PALANISAMY ORDER

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைப்பு. அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதைக் குழுக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். 

ஊரடங்கால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாததால் பண வசூலை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் பண வசூலை நிறுத்தி வைக்க அறிவுரை. உத்தரவை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை. உணவுப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் ZOMATO, SWIGGY- க்கு தடை தொடரும். 

TAMILNADU CM PALANISAMY ORDER

கால்நடை, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு தடையில்லை. மார்க்கெட், சந்தையில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க, பெரிய இடங்கள், மைதானங்களில் காய்கறிகள் விற்கலாம். காய்கறி, பழ வகைகளை விற்கும் போது 3 அடி தூரம் மக்களிடையே இடைவெளி இருக்க வேண்டும். காய்க்கறி கடைகளுடன் மருந்துக்கடைகள், மளிகை கடைகளிலும் மக்களிடையே இடைவெளி அவசியம். 

TAMILNADU CM PALANISAMY ORDER

வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேரின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 54 ஆயிரம் பேரும் வெளியே வராதவாறு, அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டோருக்கு தேவையான பொருட்களை வழங்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு, காசநோய், எச்ஐவி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவசர தேவைக்கு 108-ஐ தொடர்பு கொள்ளலாம். விவசாயம் தொடர்பான எந்தப் போக்குவரத்துக்கும் தடையில்லை". இவ்வாறு முதல்வர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.