மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

tamilnadu cm palanisamy discussion with doctors team for tomorrow

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை (26/05/2020) ஆலோசனை நடத்துகிறார். மே 31- ஆம் தேதியுடன் முடியும் பொதுமுடக்கத்தை ஐந்தாவது முறையாக நீட்டிக்கலாமா? வேண்டாமா? என முதல்வர் கேட்டறிகிறார். மேலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார். இதுவரை மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படியே தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

cm palanisamy coronavirus Doctors lockdown Tamilnadu team
இதையும் படியுங்கள்
Subscribe