Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் வாக்களிப்பு 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். வாக்கு செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடி மறைக்க அதிமுக நடமாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 21 மாநகராட்சியிலும் திமுக கூட்டணிதான் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது கோவையில் கலவரம் ஏற்படுத்த திமுக சதி செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Localbody Election mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe