Advertisment

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

tamilnadu cm discussion with doctors expert teams

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்குப் பிறகு அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

திரையரங்குகள் திறப்பு, மின்சார ரயில் சேவை தொடங்குவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட அதிக வாய்ப்புள்ளது.

lockdown coronavirus discussion cm edappadi palanisamy Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe