"அரசியல், மத கூட்டங்கள் நடத்த புதிய விதிமுறைகள்" - முதல்வர் அறிவிப்பு...

tamilnadu cm announced coronavirus lockdown relaxation

தமிழகத்தில் டிசம்பர் 19- ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறந்தவெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் (50% of maximum capacity) பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19/12/2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைபிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cm edappadi palanisamy lockdown relaxation
இதையும் படியுங்கள்
Subscribe