Advertisment

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை!

tamilnadu chief secreatry discussion to district collectors coronavirus

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

இதில் கரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது, இ-பாஸ் முறையை ரத்துசெய்வது குறித்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தலைமைச் செயலாளர் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதுச்சேரி அரசு நேற்று முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus discussion District Collectors Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe