ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைத் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (19/08/2021) தலைமைச் செயலகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், தேசிய ஆதி திராவிடர் ஆணைய இயக்குநர், தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe