Skip to main content

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

TAMILNADU CHIEF MINISTER ARRIVED IN DELHI

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று (18/07/2021) மாலை சென்னை விமான நிலையம் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். 

 

டெல்லி விமான நிலையம் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

 

அதைத் தொடர்ந்து, நாளை (19/07/2021) டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதேபோல், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.