தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் பிடிபட்டதாகவும், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீது வழக்குப்பதிவு. கடந்த செப் 14,15 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றதாக டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது.