சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
சுமார் 1.30 மணி நேரமாக நடைபெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட், தொழில் வளர்ச்சி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.