சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
மருத்துவ நிபுணர் குழுவுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், தங்கமணி, சரோஜா, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வு, கட்டுப்பாடு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு தர அவசர சட்டம் பிறப்பிக்கவும் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.