ADVERTISEMENT
ADVERTISEMENT
வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ல், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழகத் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல்- 6 ஆம் தேதி ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை தரவேண்டும். தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை தர வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விடுமுறை தரவேண்டும். விடுமுறை நாள் ஊதியம் சாதாரணமாக ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்குத் தரப்படும் ஊதியமாக இருக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறையாமலும் இருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments