ADVERTISEMENT

தென் மண்டல நிர்வாகிகளுடன் அக்.,23 -ஆம் தேதி மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

09:25 AM Oct 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென் மண்டல நிர்வாகிகளுடன் வரும் அக்டோபர் 23- ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென் மண்டல தி.மு.க. நிர்வாகிகளுடன் வரும் அக்டோபர் 23- ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆலோசனை நடத்துகிறார். அண்ணா அறிவாலயத்தில் அக்டோபர் 23- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் அக்டோபர் 21- ஆம் தேதி ஆலோசிக்கும் மு.க.ஸ்டாலின் தென் மண்டல நிர்வாகிகளுடன் அக்டோபர் 23- ஆம் தேதி ஆலோசிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT