சட்டமன்ற தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க தி.மு.க.வில் குழுவை அறிவித்தார் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021- ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.