/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus3_2.jpg)
தமிழகம்- ஆந்திரா மாநிலத்திற்கு இடையே பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் இருந்து வரும் நவம்பர் 25- ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரி, கர்நாடகா மாநில பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது ஆந்திர மாநிலத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)