சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும்தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிகபட்சமாக திருச்செந்தூரில் 7 செ.மீ, சீர்காழியில் 6 செ.மீ, மீனம்பாக்கத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.