Skip to main content

கீழடியில் அரை இஞ்ச் சுடுமண் பானை;வராக முத்திரை சூதுபவளம்- ஆய்வில் தமிழக, கேரள அதிகாரிகள்...!!!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

உலகின் மேம்பட்ட நாகரீகம் தமிழருடையதே என்பதற்கு அடையாளமாய் தோண்ட தோண்ட புதையலாய், அகழாய்வில் பல ஆச்சரியங்களை அளித்து வருகின்றது சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி. இங்கு கிடைத்த அடையாளங்களையும், பொருட்களையும் தொல்லியல் துறை சார்ந்த தமிழக, கேரள அதிகாரிகள் ஒன்றிணைந்து நேரடியாகவே களத்திலிறங்கி ஆய்வினை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 Tamilnadu and Kerala officials in the study in keezhadi Tamilnadu and Kerala officials in the study in keezhadi

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் உலகின் தொன்மையான நாகரீகத்தினை அறிய பல கட்டமாக அகழாய்வு பணி நடைப்பெற்று வருகின்றது. உலகின் முதல் மற்றும் தொன்மையான நாகரீகம் தமிழருடையதே என்பதை பறைச்சாற்றும் விதமாக பல அடையாளங்களும், பொருட்களும் இங்கு கிடைக்கப்பெற்று ஆச்சரியமளிக்க, தமிழக தொல்லியல் துறையோ கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 47 லட்ச ரூபாய் செலவில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் 39 குழிகள் ( 10.2 மீட்டர் நீள அகலம் உள்ளது) தோண்டப்பட்டு தனது ஐந்தாவது கட்ட அகழாய்வை துவக்கியது. இது குறித்து நக்கீரன் இணையத்தளத்தில் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றோம். அகழாய்வின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று தமிழக தொல்லியல் துறை கமிசனர் உதயசந்திரன் இணை இயக்குனர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி உள்ளிட்டோருடன் கேரள மாநில தொல்லியல் துறை நிபுணர் செரியனும் இணைந்து அகழாய்வை பார்வையிட்டனர்.

 Tamilnadu and Kerala officials in the study in keezhadi


நீதியம்மாள், முருகேசன் ஆகியோரது நிலங்களில் கிடைத்த செங்கல் கட்டுமானம், சுடுமண் குழாய் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர்கள் அகழாய்வு பணி குறித்து கேட்டறிந்ததது மட்டுமில்லாது, அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களையும் நேரில் பார்வையிட்டு ஆர்வத்துடன்ஆய்வு செய்தனர். இதில் அரை இஞ்ச் சுடுமண் பானை, வராக உருவம் சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் என்பன அதிகாரிகளை ஆச்சர்யமளித்தது.
 

 Tamilnadu and Kerala officials in the study in keezhadi

 

இதுகுறித்து பேசிய தமிழக தொல்லியல் துறை கமிசனர் உதயசந்திரனோ,  " இரட்டை சுவர், உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் கிடைத்துள்ளன. 4ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் விபரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது .கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தாண்டு அகழாய்வு செய்ய உள்ளோம், கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்து தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதுகுறித்து உலக அளவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாலேசிக்க உள்ளோம், அதன்பின் முடிவுகள் வெளியிடப்படும்." என்கிறார் அவர். செப்டம்பர் மாதத்தோடு 5ம் கட்ட அகழாய்வு முடிவுபெற உள்ளதால் அகழாய்வு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.