Skip to main content

தமிழக- ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே தடுப்பு சுவர்... பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

tamilnadu and andhra border wall peoples


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சைனகுண்டா என்கிற கிராமத்தோடு தமிழக எல்லை முடிந்து ஆந்திரா எல்லை தொடங்குகிறது. இந்த சாலை வழியாக ஆந்திரா மாநிலம் குப்பம் நகருக்குள் நுழைந்து சித்தூர், திருப்பதி என ஆந்திரா மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்கலாம். 


கொங்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வழியாக வரும் வாகனங்கள் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது 144 தடை உத்தரவுக்கு பிறகும் இந்த சாலை பிஸியாகவே இருந்தன. இந்த சாலையின் சோதனை சாவடியில் இரு மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரதுறையினர் வாகனங்களில் வரும் நபர்களை பரிசோதனைக்கு பின்பே அனுப்பி வைத்து வந்தனர்.
 

 

tamilnadu and andhra border wall peoples


இந்நிலையில் காட்பாடி வழியாக ஆந்திரா மாநிலம் செல்லம்- சித்தூர் சாலையில் கெடுபிடிகள் அதிகம் என்பதால் வாகன ஓட்டிகள் சைனகுண்டா வழி சாலையை அதிகம் பயன்படுத்த துவங்கினர். அதேபோல் ஆந்திரா மாநிலம் எல்லையோர பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் தமிழக எல்லைக்குள் வந்து தங்களுக்கானப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனைத் தடுக்க முடியாமல் தவித்தனர் வேலூர் மாவட்ட அதிகாரிகள்.

இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான அதிரடியாக ஒரு முடிவெடுத்தனர். அதன்படி அந்த முக்கிய சாலையை மறித்து ஹாலோ பிரிக்ஸ் கற்களை வைத்து 5 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி சாலையை முற்றிலும் அடைத்துவிட்டனர். இதனால் பெரிய வாகனங்கள் மட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்கள் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. 

 

ம



வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரத்தின் அதிரடியான இந்த செயல்பாட்டைக் கண்டு  இரு பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுப்பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, வேலூர் மாவட்டம் ரெட் அலர்ட் பகுதியாக உள்ளது. மாநில எல்லை மாவட்டமாகவும் உள்ளது. ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த மாவட்டத்துக்கு வருகிறார்கள். சித்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம். இங்கு வருபவர்கள் இன்னும் கரோனாவை பரப்பிவிட்டு போய்விட்டால் இன்னும் பாதிப்பு அதிகமாகும். இந்த சாலையில் தான் கட்டுக்கடங்காமல் போகிறார்கள், வருகிறார்கள். அதனால் தான் இப்படியொரு சுவரை கட்ட உத்தரவிட்டார் என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!