Skip to main content

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 105 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 105 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் மற்றும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி அவ்வாறு மாற்றப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேலானதை அடுத்து, ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிக்களில் சிலர் முன்பு பணியாற்றிய அதே மாவட்டத்திற்கும், பலர் புதிய பணியிடங்களுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.  இன்னும் சிலர் சொந்த மாவட்டத்திற்கு பக்கத்து மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.



சேலம் மாவட்டத்தில் ஓமலூர் சப்டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் டி.சரவணன் சேலம் மாநகர வடக்கு சரக உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி சப்டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.பாஸ்கரன் மீண்டும் ஓமலூர் டிஎஸ்பியாக மாற்றப்பட்டு உள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.அசோக்குமார், மாவட்ட மது ஒழிப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த இடம் ஏற்கனவே காலியாக இருந்தது. 

 

tamilnadu all districts dsp police tranfer dgp tripathy


 


சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.சண்முகையா, சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வரும் உதவி கமிஷனர் கலைசெல்வன், சென்னை பெருநகர ஆணையரக மக்கள் தொடர்பு அலுவலக உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

tamilnadu all districts dsp police tranfer dgp tripathy

 


சேலம் மாவட்ட ரூரல் சப்டிவிஷன் சங்கரநாராயணன், சென்னை பெருநகர செயின்ட் மவுன்ட் சரக உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வரும் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், சென்னை பெருநகர மதுவிலக்குப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். சேலம் மாநகர மேற்கு சரக உதவி கமிஷனர் எஸ்.சேகர், ஈரோடு மாவட்டம் பவானி சப்டிவிஷனுக்கு மாற்றப்பட்டு உள்ளார். 


 

tamilnadu all districts dsp police tranfer dgp tripathy

 


நீலகிரி மாவட்டம் ஊட்டி சப்டிவிஷன் டிஎஸ்பி பி.எம்.தங்கவேல், சேலம் மாவட்டம் சங்ககிரி சப்டிவிஷனுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தர்மபுரி மாவட்ட கியூ பிரிவு டிஎஸ்பி ஹயாத், கோவை மாவட்ட டான்ஜெட்கோ விஜிலன்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவர்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 105 டிஎஸ்பி / உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.