Skip to main content

மாநிலங்களவையில் ஒரு மசோதாவைக் கூட கொண்டு வராத அதிமுக எம்.பிக்கள்!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019


நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் நிறைவடைகிறது. இந்நிலையில் ஆறு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதவிக்காலம் நிறைவடைய உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம். பொதுவாக மசோதாக்களை  மக்களவை மற்றும்  மாநிலங்களவையில் கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.

 

 

TAMILNADU ADMK RAJYA SABHA RETIREMENT MPS PERFORMANCE DETAILS NO BILL INTRODUCED

 

 

இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் மசோதாவை கொண்டு வரும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக கொண்டு வரும் மசோதாவிற்கு "தனிநபர்" மசோதா என்ற பெயர் உள்ளது. இவர்கள் கொண்டு வரும் மசோதாக்களை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அது சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு உறுப்பினர்களும் மாநில மக்களின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன் தொடர்பாக மசோதாவை தாக்கல் செய்து, அதை வெற்றிக்கரமாக நிறைவேற்றி வருகின்றன.

 

 

TAMILNADU ADMK RAJYA SABHA RETIREMENT MPS PERFORMANCE DETAILS NO BILL INTRODUCED

 

 

ஆனால் தமிழகத்தில் தற்போது ஓய்வு பெறவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் அதிமுகவை சேர்ந்த மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் உள்ளிட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட மாநிலங்களவையில் "தனிநபர்" மசோதாவை கொண்டு வந்து, அதை சட்டமாக மாற்ற முயற்சிக்கவில்லை. இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த உறுப்பினர்களில் ஒருவர் கூட மாநிலங்களவையில் தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை என்பது தொடர்பான அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிமுக உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலங்களில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடுத்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.