Skip to main content

மாணவ, மாணவியருக்கு பத்தாயிரம் பாடப்புத்தகத்திற்கான லேபிள்! பேரூராட்சி நிர்வாகம் வழங்கியது!!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 

தமிழக அரசு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி பைகள் பயன்பாட்டை நிறுத்த உத்தரவிட்டதன் பேரில் பேரூராட்சி பகுதிகளில் நெகிழி பைகள் பயன்பாட்டை கண்கானித்து தடுத்து வருகின்றனர்.

 

மேலும் பொது சுகாதாரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் எடுத்து வரும் நிலையில் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் பொது சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி திறக்கும் ஜீன்-3 தேதியன்று சின்னாளபட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில படிக்கும் மாணவ, மாணவியர்கள் தங்களுடைய பாடநூல்களில் ஒட்டிக்கொள்ளும் வண்ணம் 10ஆயிரம் லேபிள்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதில் மழைநீரை சேமிப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். 

 

l

நமது நகரம் தூய்மையான நகரம், பசுமையான நகரம் என்ற வாசகங்கள் பொறித்த லேபிள் வழங்குவதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நாளும் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

 

இது சம்மந்தமாக சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறுகையில்... மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளில் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக பள்ளி மாணவர் மத்தியில் பொது சுகாதாரம் மற்றும் மரம் வளர்ப்பது, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என்பதால் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10ஆயிரம் லேபிள்களை வழங்கி வருகிறோம். அதை மாணவ, மாணவிகள் தங்கள் நோட்டு, புத்தகங்களில் ஒட்டி தினசரி பார்க்கும் போது சுகாதாரத்தை மேம்படுத்துவார்கள் என்றார்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.