Skip to main content

24 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்; டிஜிபி உத்தரவு!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

தமிழ்நாடு முழுவதும் 24 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் / உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி / ஏசி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

மக்களவை தேர்தலின்போது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான இரு மாதங்களுக்குப் பிறகு, காவல்துறையில் மீண்டும் பெரிய அளவில் இடமாற்றங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், செப். 20ம் தேதி மாலையில், தமிழகம் முழுவதும் 24 டிஎஸ்பிக்களை திடீரென்று இடமாற்றம் செய்து, டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

TAMILNADU  24 TSP TRANSFER  DGP ORDER IN CHENNAI


சேலம் மாநகர குற்ற ஆவணக்காப்பக உதவி ஆணையராக பணியாற்றி வரும் ராஜகாளீஸ்வரன், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சரக கியூ பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த டிஎஸ்பி பொன்னம்பலம், கடலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவில், ஏற்கனவே காலியாக இருந்த பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வரும் ரவிச்சந்திரன், தர்மபுரி மாவட்ட கியூ பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த இடம் காலியாக இருந்தது. விழுப்புரம் உள்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வரும் வி.வி.திருமால், திடீரென்று சென்னை தலைமை இடத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த இடமாறுதல் உத்தரவில் பெண் டிஎஸ்பிக்கள் ஒருவரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.