Skip to main content

வடமாநிலங்களில் இருந்து தமிழகம் இறங்கும் கஞ்சா புகையிலை

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

தமிழகம் முழுவதும் வடமாநிலங்களில் இருந்து வரும் இரயில்கள், பேருந்துகளில் கஞ்சா, புகையிலை தமிழகம் முழுவதும் இறங்கி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மதுரை இரயில் நிலையத்தில் 100 பெட்டிகளுக்கு மேல் புகையிலை வந்து இறங்கியது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள டீக்கடைகள் டீ விற்பனையை விட இந்த புகையிலை கஞ்சா பொட்டலங்கள் விற்கும் மையங்களாக மாறி வருகிறது. இதே போன்று பெட்டிக்கடைகளிலும் இந்த விற்பனை தொடர்கிறது.

k

 

சமீபத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, புகையிலை கடத்தல் அதிகரித்து வருகிறது. தமிழக போலிஸ் அங்கொன்றும் இங்கொன்றுமாக கைது செய்து வருகிறார்கள்.

 

கடந்த மார்ச் மாதம் கரூர் ஜீவாநகர் பகுதியில் வீட்டில் 1 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்தவரை கைது செய்தது போலீஸ்.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் கரூர் கொளந்தானூரில் ஒருவர் அங்குள்ள மில் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் சென்று சோதனையிட்டபோது, கஞ்சா விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கந்தன்(39) என்பவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

 

k

 

கரூர் சின்னஆண்டாங்கோவில் ரோடு பாண்டியன் நகரில் உள்ள ஒரு வீட்டில், சரக்கு வேனில் கொண்டு வந்து அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். போலீசை கண்டதும், சரக்கு வேன் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுகன் (27) என்பவர் தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த வீட்டை சோதனையிட்டபோது அதில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.


இதையடுத்து அங்கிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களும், கரூர் அருகே முருகநாதபுரத்தில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர்களுமான சாவ்லாராம் (வயது 30), ஜிதேந்திரகுமார் (21), 16 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து குறைந்த விலைக்கு புகையிலை பொருட்களை வாங்கி வந்து, கரூர் பாண்டியன் நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெட்டிக்கடைகளில் கொடுத்து மறைமுகமாக அதனை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

 

இதையடுத்து புகையிலை பொருட்கள் இருந்த மூட்டைகளை போலீசார் எடை போட்டு பார்த்தனர். இதில் 1,488 கிலோ இருந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 16 வயது சிறுவன், சாவ்லாராம், ஜிதேந்திரகுமார், தப்பியோடிய வேன் டிரைவர் சுகன் ஆகிய 4 பேரையும் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர். இந்த விற்பனையில் முக்கிய பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? எந்தெந்த கடைகளுக்கெல்லாம் விற்பனைக்காக புகையிலை பொருட்களை அனுப்பியுள்ளனர் என்பன போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் புகையிலை பொருட்களுடன், சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

தமிழகத்தில் வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் கொண்டுவரும் இரண்டாம் தரவிற்பனையும், கஞ்சா, புகையிலை, போன்ற போதை பொருட்களின் விற்பனையில் அவர்களின் பொருளாதர நிலை உயர்வது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக்கப்பட்டு வருகிறது. இதை கவனமாக கையாளவேண்டியது தமிழக காவல்துறையின் கடமையாகும்.

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாக வெட்டப்பட்ட கஞ்சா வியாபாரி - மூவர் கைது!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

Cannabis dealer incident

 

திருச்சி ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் பெயிண்டராக பணியாற்றிவரும் நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தில் வேலை கிடைக்காததால் கஞ்சா விற்கும் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று (11.06.2021) பாரதிநகர் பின்புற பகுதியில் அருண் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஏர்போர்ட் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இதனிடையே அவர்களுடைய முதற்கட்ட விசாரணையில், அருண் வெட்டப்படுவதற்கு முன்பு தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நின்றிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரேம், ஜாஹிர், முபாரக் ஆகிய அவருடைய நண்பர்களைப் பிடித்து காவல்துறையினர் தற்போது விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

Next Story

போலீசே போர்டு வைக்கிறது..! - கரூரில் "கஞ்சா" கனஜோர்...!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

karuru incident

 

கரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யாராவது கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு போர்டு வைத்திருக்கிறார்கள் கரூர் போலீசார்.

ஜவுளி மற்றும் கொசுவலை உற்பத்தியில் பிரதான நகரமான கரூரில், தொழிற்கூடங்களும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிகம். தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறிவைத்து தான் இந்த கஞ்சா விற்பனை நடக்கிறது. கரூர் நகர காவல் நிலையம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாகச் செய்யப்படுகிறது. பல காவல் அதிகாரிகள் மாமூல் வாங்குவதால் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகவலனுக்கு ரகசியத் தகவல் கிடைத்து வருவதால், அதன் அடிப்படையில் அவர் அவ்வப்போது போலீசாருடன் அதிரடி சோதனை நடத்துகிறார்.

இந்த மாதத்தில் மட்டும் தற்போது வரை 26 நபர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளார். இந்த நிலையில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடை செய்யவும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்து கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கமேடு மேம்பாலம், 5 ரோடு, வஞ்சியம்மன் கோவில் தெரு, ரத்தினம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கஞ்சா விற்பனை செய்தாலோ, வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அது போன்ற செயல்பாடுகள் தெரிய வந்தால், கரூர் நகர காவல் நிலையத்திற்கும், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்கும்படி அதன் செல்ஃபோன் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

 

போலீசே போர்டு வைக்கிறது என்றால் கரூரில் கஞ்சா கனஜோர்தான்...!