tamilisai talks about karnataka bjp meeting tamil state song stopped issue

பாவேந்தர் பாரதிதாசனின்133வதுபிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதனைத்தொடர்ந்துசெய்தியாளர்களைச்சந்தித்துப்பேசினார். அப்போதுஅவர் பேசுகையில், "புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின்133வதுபிறந்தநாளில் அவரை வணங்குவதில் பெருமை கொள்கிறேன். புதுச்சேரியில் இன்று (29.04.2023) மாலை பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளது. புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துபாரதிதாசன் உடையது தான். புதுச்சேரியோடுபாரதிதாசனும், பாரதியாரும் ஒன்றிணைந்தவர்கள்.அதனால் மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நாளைய தினம் (30.04.2023) பிரதமரின் மனதின் குரல் 100வதுநிகழ்வு ஒளிபரப்பப்படுகிறது. நாளை காலை தெலுங்கானாவிலும், மாலையில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் புதுச்சேரியிலும் கொண்ட இருக்கிறோம். மனதின் குரல் நிகழ்ச்சி மிகப்பெரிய சமுதாய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் மனதின்குரலைக்கேட்க வேண்டும். இது அரசியல் கலவாத சமுதாயநிகழ்ச்சி.

Advertisment

அரசு அலுவலகங்களில்பணியாற்றும்பெண்களுக்கு வெள்ளிக்கிழமை இரண்டு மணிநேரச்சலுகை வரவேற்புநன்றாகத்தான் இருக்கிறது.எதிர்க்கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது என்று தெரியும். எதிர்க்கட்சி தலைவர் சிவாஇதனைப்பெண்அடிமைத்தனம் என்று குறிக்கிறார். இது எப்படி என்று தெரியவில்லைஎன்னைப் பொறுத்தவரைப்பெண்கள் முன்னேறி வருகிறார்கள். கடுமையாக பணியாற்றும் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த சலுகைவழங்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை மகிழ்வோடுபகிர்ந்து கொள்கிறேன். கலைஞருக்குப்பேனா சிலைவைப்பதற்குச்சுற்றுச்சூழல் துறை அனுமதிஅளித்து இருக்கிறார்கள். பேணாசிலை வைப்பதன் மூலம்சுற்றுச்சூழலுக்குப்பாதிப்பு ஏற்படுகிறது என்றால் இது அவருக்கே ஒத்துக்கொள்ளாது. சுற்றுச்சூழல்பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு தான் அனுமதி கொடுக்கப்பட்டது இருக்கிறது" என்றார்.

கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதுதமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்" என்றார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, "பெண்களுக்குப்பாதுகாப்பு குறித்து எல்லா அரசு உறுதி செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தமாற்றுக்கருத்தும் இல்லை" என்றார்.