Skip to main content

பிரகாஷ்ராஜ் எல்லாம் ஒரு தலைவரா? -தமிழிசை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

 டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பிடித்துக் கொண்டனர் என்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கருத்து குறித்த கேள்விக்கு கேட்கப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த அவர்,  

 

BJP

 

டெல்லி மக்களாக இருந்தாலும், டெல்லியில் வாழுகின்ற தமிழக மக்களாக இருந்தாலும், டெல்லியில் வாழுகின்ற தென்னிந்திய மக்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்ததான் இந்த முயற்சி.

 

ஒன்றாக சகோதரர்களாக தலைநகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் ஒரு மாநிலத்தைச் சார்ந்தவர்களை மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு பேசும் பொழுது அதை மாற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் இதற்கு முன்னால் இதே பிரித்தாளும் முயற்சி செய்து மதத்தினால், இனத்தினால், மொழியால் பிரித்து அதன் மூலம் அதிக வாக்குகளை பெறுவதைப் போல கெஜ்ரிவால் இன்று நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்.

 

நிச்சயமாக அது தோல்வி அடையும். நேற்று பிரச்சாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் எவ்வாறு எதிர்ப்பு கிளம்பியது என்று. சகோதரர்களாக தலைவர்கள் வாழுகின்ற தலைநகரில் தென்னிந்திய மக்களும் வட இந்திய மக்களும் ஒன்றாக இந்திய மக்களாக வாழ்கின்ற நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியை கெஜ்ரிவால் செய்கிறார். அது நிச்சயமாக பலனளிக்காது.

 

 

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் பிடித்துள்ளதால் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். மேலும் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பிடித்துக் கொண்டனர் என்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் பதிவிட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு

 

பிரகாஷ்ராஜ் எல்லாம் ஒரு தலைவராக அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் வேறு சொல்ல வேண்டுமா. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை கெஜ்ரிவால் கேள்விக்கான பதில் சொல்லலாம் பிரகாஷ்ராஜ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.