Skip to main content

மடியில் கனம் இருக்கிறது வழியில் பயமும் இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published on 21/08/2019 | Edited on 22/08/2019

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்,

ப.சிதம்பரம் செய்வது சரியல்ல, அவர்மீது வழக்கு இருக்கிறது, விசாரணை இருக்கிறது அதை எல்லாம் விட்டு விட்டு இது பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது அதைவிட மோசமான அரசியல். இதை ராகுல் காந்தி ட்வீட் செய்கிறார், பிரியங்கா காந்தி ட்விட் செய்கிறார், அழகிரி சொல்கிறார் இது மத்திய அரசு வைத்த குறி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

 

tamilisai interview

 

இதில் அப்பட்டமாக அவர்கள் அரசியல் செய்கிறார்களே தவிர இது ஒரு ஊழல் குற்றச்சாட்டு வழக்கு என்பதைத்தான் டெல்லி உயர்நீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்திருக்கிறது. இரண்டு மூன்று முறை சிபிஐ அதிகாரிகள் அவர்கள் வீட்டிற்கு போனார்கள் ஆனால் ஏன் அவர் வீட்டுக்கு வரவில்லை, 6 மணி வரை டெல்லியில்தானே இருந்திருக்கிறார். இதை அவர் சட்டரீதியாக அணுகட்டும் ஆனால் கொடுக்கப்பட்டது கைது நடவடிக்கை அல்ல, சம்மன்தான் விசாரணைக்கு ஏன் வரக்கூடாது. உயர்நீதிமன்றம் உங்களுக்கு ஜாமீன் மறுத்த சூழ்நிலையில் விசாரணைக்குதான் அழைக்கிறார்கள். விசாரணைக்கு அவர் வரவில்லை தலைமறைவாகி விடுகிறார் என்று சொன்ன பிறகுதான் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

இங்கு உள்ள எல்லோருமே என்ன சொல்கிறார்கள் என்றால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்கிறார்கள். 6 மணி வரைக்கும் அங்கேதான் இருந்திருக்கிறார். இந்நிலையில் மத்திய அரசு புலனாய்வுத் துறையை வைத்து எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாதா? அப்படி கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு எப்படி அணுக முடியுமோ அப்படித்தான் அணுகி கொண்டிருக்கிறார்கள். ஏன் தலைமறைவாகி இருக்க வேண்டும். ஏன் செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ண வேண்டும். ஏன் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருக்க வேண்டும். ஏன் வீட்டிற்கு வராமல் தலைமறைவாக வேண்டும். அதற்கு முன்னால் தலைவர்கள் அப்படிதான் செய்தார்களா? நேரடியாக விசாரணைக்கு நீங்கள் துணிச்சலாக ஒப்புக் கொள்ளுங்கள். அதன் பிறகு கைது ஆனாலும்கூட குற்றமற்றவர் என்றால் வெளியே வரப் போகிறீர்கள். அதில் ஏன் இவ்வளவு பிரச்சனை. நீங்கள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிலைப்பாடு நிச்சயமாக மடியில் கனம் இருக்கிறது அதனால் வழியில் பயமும் இருக்கிறது என்பதுபோல் இருக்கிறது. கைது இல்லையா என்பது இரண்டாவது, விசாரணை நடக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது ஆனால் சிதம்பரம் நடந்து கொள்ளும் முறை ஒரு சட்ட வல்லுனர் நடந்து கொள்ளுகின்ற முறை அல்ல என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.