Skip to main content

எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்துவைத்தாவது சேற்றில் செந்தாமரை மலரும்-தமிழிசை!!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

எங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை சேர்த்து வைத்துகூட, அதில் தாமரையை மலர செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை,

 

TAMILISAI

 

மத்திய பாஜக அரசு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கொடுக்கவில்லை ஆய்விற்குத்தான் அனுமதி கொடுத்துள்ளது, ஆனால் ஆய்விற்கான அனுமதியையே நீங்கள் அணைக்கட்டியதை போல முன்னிறுத்துகிறீர்கள் என்றால் மீத்தேன் பற்றிய ஆய்வுக்குதான் கையெழுத்திட்டோம் என்று சொல்லும் ஸ்டாலின் மீத்தேன் எடுக்கத்தான் கையெழுத்திட்டோம் என சொல்லமுடியுமா என்ற கேள்வியைத்தான் உங்களிடம் முன்வைக்கிறோம். 

 

பாஜக மேகதாது அணை  விஷயத்தில் அமைதியாக உள்ளதாக நீங்கள் பொய் பிம்பத்தை உருவாக்குகிறீர்கள். இப்போதுவரை மேகதாது பிரச்சனை இருக்கிறது என்றால் அதற்கு திமுகதான் காரணம். எனவே  பாஜகவை நீங்கள்  குறைசொல்லக்கூடாது.

 

புல், பூண்டிற்கே இங்கு வழியில்லை என கூறுபவர்களுக்கு பதில் சொல்லிவிட்டோம். எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்துவைத்தாவது சேற்றில் செந்தாமரை மலரும். முதலில் வைகோ துரைமுருகனிடம் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார், பின்னர் அன்பழகன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது திருமாவளவனுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார். நான் அவ்வளவு லட்சம் கொடுத்தேன் இவ்வளவு லட்சம் கொடுத்தேன் என்று கூறுகிறார்.

 

ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியை தரப்போகிறது இவர்களது சண்டையும் கூட்டணியும், ஏதோ வலிமையான கூட்டணி அமைத்ததாக நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.