ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

tamilandu government ips transfer

ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், "உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையிட ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையர் அருண் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் ஆவடி காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உளவுத்துறையின் முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார். இதன் மூலம் ஏடிஜிபி லெவலில் இருந்த உளவுத்துறை ஐஜி அளவிலான லெவெலில் தரயிறக்கம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe