Skip to main content

"கன்னிப் பேச்சு...எதிர்த்த பாஜக" நிர்மலாவை வெளுத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

தென் சென்னை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றவர் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன். இவர் நேற்று தனது கன்னிப் பேச்சை பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். கிட்டதட்ட 14 நிமிடங்கள் பேசிய அவர், பாஜக உறுப்பினர்களை, குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தெறிக்கவிட்டார். வாழ்த்து சொல்லி அவரை பாராட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட் குறித்து கடுமையாக பேசினார். நீங்கள் தாக்கல் செய்தது பட்ஜெட் அல்ல, அது ஒரு வெற்று அறிக்கை என்று கூறி மக்களவையில் அதிரடி காட்டினார்.

குறிப்பாக தன்னுடைய உரையை ஆரம்பிக்கும் போது திருக்குறளை கூறி தொடங்கினார். பேச்சின் இடையே கணியன் பூங்குன்றனாரின் வரிகளை உதாரணமாக கூறினார். அவரது பேச்சுக்கு சில இடங்களில் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அது எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய முழு உரையும் நிறைவு செய்த பிறகே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தென்சென்னை நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம்! (படங்கள்)

Published on 04/04/2024 | Edited on 04/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர். மருத்துவர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிபேட்டையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

Next Story

தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதன்படி, இன்று (03-04-24) காலை தென்சென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்