Skip to main content

மருத்துவ மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. அமைச்சர் சொன்ன ரகசியம்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Tamil translations medical textbooks will be released Chennai Book Festival

 

சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டடம், ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரூ. 2 கோடியே 70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை தொடங்கி வைத்தனர்.

 

பின்னர், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி தலைமைத் தாங்கினார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்தப் பல்கலைக்கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் இதில் பயின்றவர்தான் முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான மறைந்த க.அன்பழகன். தற்போதுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அறிஞர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கி உள்ளது.

 

2011 இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அனுமதி பெற்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதியதாகத் தொடங்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்க வேண்டும்.  இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

இந்தக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ரூ. 113 கோடி மாணவர்களுக்கு கட்டணச்சலுகை அளிக்கப்பட்டது. தற்போது பயிலும் மாணவர்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரி போல் கல்விக் கட்டணம் ரூ.13,000 மட்டுமே. இந்தக் கல்லூரியில் நரம்பியல் மற்றும் இருதய சார்ந்த நோய்களுக்கு மருத்துவர்களை நியமித்து பல்நோக்கு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக உதவி மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தாராம் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழு அமைத்து இந்தக் கல்லூரியில் மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தும் விதமாக இந்தக் குழு ஒரு மாதம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

 

மருத்துவக் கல்வியை தமிழில் பயிலும் விதமாக 13 மருத்துவப் பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறார். அதேபோல் பொறியியல் துறையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 10 புத்தகங்களையும் வெளியிடுகிறார். தமிழகத்தில் 92 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை. உருமாறிய கொரானா வந்தால் அதனைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், “கடலூர் மாவட்டத்திற்கு மின்தடையில்லாமல் மின்சாரம் வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 20 ஏக்கர் நிலத்தைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவக் கல்லூரியில் மயிலாடுதுறை, நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக அண்டை மாநிலமான புதுவைக்குச் செல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” எனப் பேசினார்.

 

அதைத் தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மருத்துவமனை வளர்ச்சி குறித்துப் பேசினார்கள். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர், அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி, முன்னாள் எம்எல்ஏ சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சென்னையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் மருத்துவ மாணவர்களுக்கு, மருத்துவப் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது, மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிரதமர் சொல்வது அதிசயமான ஒன்றாக உள்ளது' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
 'What the Prime Minister is saying is something amazing' - Minister Ma.su interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது  முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.