Skip to main content

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சர்வேதேச அழகி போட்டியில் பங்கேற்பு!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

இந்தியா சார்பில் சர்வதேச அளவில் ஸ்பெயினில் நடைபெறும் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்கிறார். இவர் இன்று செய்தியாளர்களுடன் கலந்துரையாடினர்.

 

tamil transgender Participated in the Tamil beauty competition

 

அவர் கூறியதாவது " இந்திய அளவில் நடைபெற்ற 'ட்ரான்ஸ் குயின் இந்தியா' திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சென்ற வருடம் வென்றேன். அதேபோல் இந்த வருடமும் இப்போட்டி நடைபெற்றது. இந்த வருடமும் நான் வெற்றி பெற்றுருக்கிறேன். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. நான் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த முறை என்னை சர்வதேச அளவில் என்னை அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள திருநங்கைகளுக்கான அழகி போட்டிக்கு செல்ல இருக்கிறேன். இந்தியா சார்பாக போட்டியிடுவது எனக்கு மேலும் சந்தோசத்தை கொடுக்கிறது".

இவர் மேலும் கூறுகையில் "இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகள் முன்னேறி வருகிறார்கள். அடுத்த மாதம் நான் நடித்த நாடோடிகள் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளது. திருநங்கைகள் வாழ்வை மாற்ற தான் இதுபோன்ற செயல்கள் நான் செய்கிறேன். பல திருநங்கைகள் இதுபோன்ற கனவுகள் கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்த துறைக்கு வரவேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. மேலும் கூடிய விரைவில் திருநங்கைகளுக்கான மாடலிங், நடிப்பு கற்று கொடுக்கும் இன்ஸ்டிடியூஷன் ஆரமிக்க இருக்கிறேன். இது திருநங்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்".

"நான் வெளிநாட்டிற்கு செல்ல ஸ்பான்சர் தேவைப்படுகிறது, எனக்காக உதவி செய்ய விரும்புவர்கள் என்னுடைய முகநூலில் தொடர்பு கொள்ளலாம்". என்று கூறினார்.

 

nn

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.