இன்று (03.07.21) காலை 10.30 மணிக்கு சென்னை கலைஞர் கருணாநிதி நகர், அழகிரி சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி அருகில், பத்மா சேஷாத்ரி பள்ளி, மகரிஷி வித்யாலயா பள்ளி, சிவசங்கர் பாபா பள்ளி ஆகிய பள்ளிகளை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்ப் பேரரசுக்கட்சி பொதுச் செயலாளர் வ. கௌதமன், சைவப் பேரவை கலையரசி நடராஜன் அகியோர் கலந்துகொண்டனர்.